திருவலம் அடுத்த அரும்பருதியில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான மேல்நிலை நீர் தேக்க தொட்டி அகற்றப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு?

திருவலம் : திருவலம் அடுத்த அரும்பருதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த அரும்பருதி ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். குடிநீர் பயன்பாட்டிற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. பின்னர், அதன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நீர் தேக்க தொட்டியை  அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: