அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிருமிநாசினி தெளிப்பது மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் தினந்தோறும் செய்து வருகிறார். இந்நிலையில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுத்தெரு பகுதியில் நீண்ட வருடங்களாக வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடந்தது.