புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பைபாஸ் சர்ஜரி நடைபெறவுள்ளதாக ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் லேசான இதய பிரச்னைகள் காரணமாக, டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதியை நேரில் சென்று நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜனாதிபதியின் உடல்நிலை சீராக உள்ளது. மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தது.