சென்னை: பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் அவரது தாயாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வந்தவர் மரியனோ ஆன்டோ புருனோ (36). இவருக்கும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்த அமலி விக்டோரியா (32) என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதனையடுத்து மாமியர், மாமனார், கணவருடன் அமலி வாழ்ந்து வந்துள்ளார். திருமணமாகி ஒரு வருடம் வரை தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால், மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகிய 3 பேரும் அமலியை குழந்தை இல்லை என்று கூறி கொடுமை செய்து, நீ செத்துபோ என்று திட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அமலி தாய் வீட்டிற்கு சென்று மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.