பல்வேறு வசதிகளை செய்துள்ளேன்: அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று காலை ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, வெங்கடாசலம் தெரு, டி.வி.கோயில் தெரு, ஆண்டியப்பன் தெரு, மேற்கு மாதா கோயில் தெரு, அம்மன் கோயில் தெரு, வண்ணார் தெரு குடிசைப்பகுதி, வெங்கடேசன் தெரு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மக்கள் மத்தியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ‘ராயபுரம் தொகுதி மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். அரசு நிவாரணம் நேரடியாக மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளேன். புயல் வந்தபோதும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளேன்.

ராயபுரம் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன். மீண்டும் பாடுபடுவேன். உங்களில் ஒருவனாகவும், உங்கள் வீட்டு பிள்ளையாகவும் இருப்பேன். உங்கள் பிரச்னையை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம். அதை உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன்,’ என்றார்.  பிரசாரத்தின்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Related Stories: