மாற்றம் நிச்சயம் உண்டு-குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ பிரசாரம்

நெய்வேலி : குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் எம்எல்ஏ, நேற்று குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுகுப்பம், கொளக்குடி, கருங்குழி, நைனார்குப்பம், உள்மருவாய், ஓணாங்குப்பம், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், ரெட்டிப்பாளையம், கல்குணம், பூதம்பாடி, குருவன்பேட்டை, வரதராஜன்பேட்டை,  மேலப்புதுப்பேட்டை ஆகிய ஊர்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், இப்பகுதி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது முதல் ஆளாக நான் வந்து நின்றேன். அதே போல் கொரோனா காலத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். எங்கள் கூட்டணி கட்சியினர்தான் உதவிகள் செய்தனர். நாங்கள் நோட்டு, சீட்டுக்காக சேர்ந்த கூட்டணி இல்லை, கொள்கைக்காக சேர்ந்த கூட்டணி. அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. மாற்றம் நிச்சயம் உண்டு, என்றார்.

மதிமுக மாவட்ட செயலாளர் ராமலிங்கம், அரசு, காங்கிரஸ் வட்டார தலைவர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர்  முல்லைவேந்தன், மாவட்ட துணை செயலாளர்  திருமேனி, தொகுதி செயலாளர் ஜெய்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, குரு, சிவசக்தி, சிற்றரசு, நகர செயலாளர் பாலமுருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி  நிர்வாகிகள் சுந்தர், அய்யப்பன், முருகானந்தம், தனுசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தண்டபாணி, ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஹரிகிருஷ்ணன், குப்புசாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, கேஆர்எஸ், ரமேஷ், சந்துரு, கண்ணன், சங்கர், சேகர், தமிழ், வெங்கடேஷ், ராமமூர்த்தி, சாகுல், சுப்புராயலு, சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: