சோபியான்: ஜம்மு- காஷ்மீரில் ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற அவர்கள், முன்ஹால் என்ற இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீடு ஒன்றில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.