பெங்களூரு: மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளரை தேர்வு செய்ய மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த 2 நாள் கூட்டம் பெங்களூருவில் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில், கடந்த 2009ம் ஆண்டு முதல் கூடுதல் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த தத்தாத்ரேயா ஹொசபெலே தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஹொசபெலே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.