குர்கானில் பரபரப்பு சம்பவம்: தொழில் அதிபரை கடத்தி இரும்பால் தாக்கிய பெண்..! சிசிடிவி காட்சிகள் வைரல்

குர்கான்: குர்கானில் தொழில் அதிபரை கடத்தி இரும்பு கம்பியால் பெண் உள்பட 4 பேர் தாக்கிய வீடியோ இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

குர்கான் பாலம் விஹார் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தீப், ரோஷன். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பெயின்டிங் செய்யும் நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் வரும் லாபம் மற்றும் வரவு செலவு கணக்குகளை முறையாக சந்தீப்புக்கு ரோஷன் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப் கடந்த 5ம் தேதி பாலம்விஹாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு ரோஷனை கடத்திச்சென்றார். அவருக்கு அங்குஷ், காஜன்சிங் மற்றும் ஒரு இளம் பெண் உதவினர்.

அங்கு ரோஷனை கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர். அதிலும் குறிப்பாக இளம்பெண் ரோஷன் மீது ஏறி அமர்ந்து இரும்புகம்பியால் தாக்கினார். இதை அவர்களுடன் இருந்த இன்னொருவர் வீடியோ எடுத்தார். அப்போது ஒருவர்’ இந்த பூமியில் நீ எங்கு ஓடி மறைந்தாலும், உன்னை நான் கண்டுபிடிப்பேன் என்று கூறினேன் அல்லவா?’ என்று கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலானது. இதுபற்றி விசாரித்த போது சம்பவம் தொடர்பாக ரோஷன் புகார் குர்கான் போலீசில் புகார் தெரிவித்து இருப்பதும், அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து இருப்பதும் தெரிய வந்தது.

Related Stories: