குர்கான்: குர்கானில் தொழில் அதிபரை கடத்தி இரும்பு கம்பியால் பெண் உள்பட 4 பேர் தாக்கிய வீடியோ இணைதளங்களில் வைரலாகி வருகிறது.
குர்கான் பாலம் விஹார் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தீப், ரோஷன். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பெயின்டிங் செய்யும் நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் வரும் லாபம் மற்றும் வரவு செலவு கணக்குகளை முறையாக சந்தீப்புக்கு ரோஷன் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப் கடந்த 5ம் தேதி பாலம்விஹாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு ரோஷனை கடத்திச்சென்றார். அவருக்கு அங்குஷ், காஜன்சிங் மற்றும் ஒரு இளம் பெண் உதவினர்.