திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், யானைகள் போன்ற உயிரினங்கள் இருப்பதால் வருடத்துக்கு ஒருமுறை பொது கணக்கெடுப்பு மற்றும் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை வரையாடுகள் கணக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.