தர்மபுரி: தர்மபுரி அருகே குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது. மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு, ஒருமணிநேரம் கழித்து மீண்டும் புறப்பட்டு சென்றது. கோவையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த லோக்மானிய திலக் வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் நேற்று பிற்பகல் 1.20 மணிக்கு தர்மபுரி மாவட்டம் சிவாடி ரயில் நிலையத்தை கடந்து, தர்மபுரி ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒட்டப்பட்டி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வந்தபோது, ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டு புகை வந்தது. உடனே ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.