டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசுக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பேசினார். கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசுகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு சட்டங்கள் இயற்றுகிறது என திருச்சி சிவா குற்றம் சாட்டினார். மக்கள் மீது கருணை காட்டாமல் கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என கூறினார்.