கோயில்களில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பொன்னேரி தாலுகா குமரஞ்சேரி கிராமத்தில் பொன்னியம்மன் கோயில், முருகன் கோயில்கள் உள்ளது. இந்த கோயிலுக்கு பெரியகரம்பூர், குமரஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற மக்கள் தினந்தோறும் காலை, மாலைகளில் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பெண்கள் பொங்கல் வைக்க கோயிலை திறக்க வந்தனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு உண்டியல் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது 2 கோயில்களில் உள்ள உண்டியல்களை உடைத்து உள்ளே இருந்து ரூ.50 ஆயிரம், அம்மன் கழுத்தில் இருந்த அரை சவரன் நகை உள்ளிட்டவை கொள்ளைபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடுகின்றனர்.

Related Stories: