மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்ட காரின் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்துள்ளார். தெற்கு மும்பையில் ரிலையன்–்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி வீடு அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் மர்ம கார் ஒன்று கடந்த 25ம் தேதி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், அம்பானிக்கு மிரட்டல் விடுக்கும் கடிதமும் இருந்தது. பத்திரிகைகளில் வெளியான காரின் புகைப்படத்தை பார்த்ததும், அந்த காரின் உரிமையாளர் மும்பை போலீசிடம் சென்று தகவல் தெரிவித்தார். அவர் பெயர் ஹிரண் மன்சூக். தானேவில் வாகன உதிரி பாக விற்பனை கடை வைத்துள்ளார். தனது கார் சில நாட்களுக்கு முன் திருட்டு போனதாக அவர் தெரிவித்தார்.