ஆபாச சி.டி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்: ரேணுகாச்சார்யா கோரிக்கை

பெங்களூரு: ஆபாச சி.டி. விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மாஜி அமைச்சர் ரேணுகாச்சார்யா வலியுறுத்தினார்.

பெங்களூரு, விதான சவுதாவில் மாஜி அமைச்சர் ரேணுகாச்சார்யா நிருபர்களிடம் கூறியதாவது: மாநில நீர்ப்பாசனத்துறை மாஜி அமைச்சர் ரமேஷ்  ஜார்கிஹொளி மீது திட்டமிட்டு சிலர் சதித்திட்டம் தீட்டி அதை அமல்படுத்தியுள்ளனர். அரசியலில் எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு  உண்டு. அதே நேரம் தனிப்பட்ட முறையில் எங்கள் இரண்டு பேர் இடையே  எவ்வித பிரச்னையும் கிடையாது. அரசியல்வாதிகள் மீது இவ்விதம்  திட்டமிட்டு தாக்குதல் நடத்தினால் ஒரு அரசியல்வாதி கூட அதில் இருந்து தப்பிக்க முடியாது.

ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் இந்த சம்பவம் எதிராக அமைந்துள்ளது. மாஜி அமைச்சர் ரமேஷ், பெண்ணுடன் தனியாக இருக்கிற காட்சியை  யார் எடுத்தார்கள்? அது எப்போது எடுக்கப்பட்டது? என்பதை விட இதன் பின்னணியில் வேறு யார் யார்? இருக்கின்றனர் என்கிற முழு விவரமும்  வெளியே வரவேண்டும். அப்போதுதான் இவ்விஷயத்தில் பின்னணியில் இருக்கிற நபர்களின் சுயரூபம் மக்களுக்கு தெரியவரும். எனவே, மாநில  அரசின் சார்பில் இந்த சம்பவத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  தவறு செய்தாரா? அல்லது தவறு  செய்யவில்லையா? என்பது விசாரணையின் முடிவில் வெளியே வரும். ’’ என்றார்.

Related Stories: