பெங்களூரு: ஆபாச சி.டி. விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மாஜி அமைச்சர் ரேணுகாச்சார்யா வலியுறுத்தினார்.
பெங்களூரு, விதான சவுதாவில் மாஜி அமைச்சர் ரேணுகாச்சார்யா நிருபர்களிடம் கூறியதாவது: மாநில நீர்ப்பாசனத்துறை மாஜி அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹொளி மீது திட்டமிட்டு சிலர் சதித்திட்டம் தீட்டி அதை அமல்படுத்தியுள்ளனர். அரசியலில் எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு. அதே நேரம் தனிப்பட்ட முறையில் எங்கள் இரண்டு பேர் இடையே எவ்வித பிரச்னையும் கிடையாது. அரசியல்வாதிகள் மீது இவ்விதம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினால் ஒரு அரசியல்வாதி கூட அதில் இருந்து தப்பிக்க முடியாது.