கோலார்: மாநிலத்தில் நடந்து முடிந்த எப்டிஏ எழுத்து தேர்தல் முறைகேடு நடக்க கர்நாடக மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மெத்தன போக்கு தான் காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டினர். மாநில அரசு துறையில் காலியாக இருக்கும் எப்டிஏ பணியிடம் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜனவரி 24ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு நடப்பதற்கு முதல் நாள், வினாத்தாள் வெளியாகியதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின் கடந்த 28ம் தேதி மீண்டும் எழுத்து தேர்வு நடந்தது. இதில் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இருந்த தேர்வு மையத்தில் வினாத்தாள் வெளியாகியதாக தகவல் வந்துள்ளது.