வேளச்சேரி: தரமணி அசென்டாஸ் சாலையில் உலக வங்கி உள்ளது. இதில் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக சரத்சந்தர்(41), பணியாற்றி வருகிறார். இவர் உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக சிலர் நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றுவதாக தரமணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜாபர்கான்பேட்டை எஸ்.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த அந்தோணி(39) என்பவர் ஏமாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அந்தோணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.