வடகிழக்கு டெல்லியில் பஸ் மோதி 2 பேர் பலி

புதுடெல்லி: காஜியாபாத்தை சேர்ந்தவர்கள் விஜய், டிங்கு. இவர்கள் டெல்லியில் வேலை செய்து வந்தார்கள். பணி முடிந்ததும் பைக்கில் நேற்று டெல்லியில் இருந்து காஜியாபாத் நோக்கி புறப்பட்டனர். மாலை 4.30 மணி அளவில் சோனியா விஹார் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த அரியானா அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீேழ விழுந்த விஜய், டிங்கு மீது பஸ் மோதி அவர்களை நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியானார்கள். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பஸ் டிரைவரை கைது செய்தனர். மேலும் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: