9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

ஆம்பூர்: சிறுமியை தென்னந்தோப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சிறுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் சிறுமியை அவரது தாய் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் சிறுமியிடம் டாக்டர்கள் மற்றும் பெற்றோர் விசாரித்தனர். அப்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த மதியழகன்(23) என்பவர், அருகிலுள்ள தென்னந்தோப்பிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்தார்.

Related Stories: