ஆம்பூர்: சிறுமியை தென்னந்தோப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சிறுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் சிறுமியை அவரது தாய் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.