திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இரவில் காரில் திருச்சூரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது முன்னாள் டிரைவர் பல்சர் சுனில் என்பவர் உட்பட 7 ேபர் கைது செய்யப்பட்டனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, பிரபல நடிகர் திலீப்தான் இதற்கான சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து திலீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கைக்கு ஏற்ப, பெண் நீதிபதி ஹனி வர்க்கீஸ் தலைமையில் கடந்த 2019ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.