சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகின்றன. இந்தநிலையில், அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இழுபறியாக சென்றுகொண்டிருக்கிறது. இதனால், சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து அதிமுக எந்த வித நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடந்த வாரம் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிைலயில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 15 நிமிடமாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. சந்திப்பிற்கு பிறகு சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: