குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

கறம்பக்குடி : கறம்பக்குடி மழையூர் அருகே காஞ்சிரான்கொள்ளையை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கவேல். இவரது உறவினரான நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளியை சேர்ந்தவர் பார்த்திபன் (26). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது. மழையூர் அடுத்த வாராப்பூர் கோயில் மாசிமக திருவிழாவில் பங்கேற்க தங்கவேல் வீட்டுக்கு பார்த்திபன் வந்தார்.

இதையடுத்து நேற்று காலை உறவினர் தங்கவேல் மற்றும் உறவினர்களுடன் தீதானிப்பட்டி பெண்டுகநாட்சி குளத்தில் குளிக்க பார்த்திபன் சென்றார். குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று பார்த்திபன் குளித்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து ஆலங்குடி தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து குளத்துக்குள் இறங்கி தண்ணீரில்மூழ்கி இறந்த பார்த்திபன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: