சென்னை: பட்டப்பகலில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் மர்ம கும்பல் கடத்த முயன்றது. பொதுமக்கள் ஓடி வந்ததை பார்த்து தப்பி ஓடியது. பட்டினப்பாக்கம் ராஜா தெருவில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மதியம் தெருவில் சிறுவர், சிறுமிகள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர், குழந்தைகளிடம் நைசாக பேசி “கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடலாம்” என்று கூறி ஆட்டோவுக்குள் அழைத்துள்ளனர். அப்போது ஒரு சிறுமி, “நாங்கள் ஓடி பிடித்துதான் விளையாடுவோம். கண்ணாமூச்சி விளையாட மாட்டோம்” என்று கூறியிருக்கிறாள். ஆனாலும், கண்ணாமூச்சி விளையாட மர்ம நபர்கள் அழைத்துள்ளனர்.