ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டையில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வை கண்டித்து 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் பொக்லைன் இயந்திர உதிரி பாகங்கள் விலை ஏற்றத்தை கண்டித்து ஊத்துக்கோட்டை பகுதியில் 2 நாட்கள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.