லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாடிக்கையாளர்களை போட்டிப் போட்டு கொண்டு வரவேற்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் என்ற இடத்தில் பானிப்பூரி கடைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பில் இரண்டு குழுவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு சற்று நேரத்தில் கை கலப்பாக மாறவே. இரு தரப்பினரும் கைகளில் கிடைத்த உருட்டுக் கட்டை, பைப்புகள், இரும்பு கம்பிகளால் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர்.