டூல்கிட் வழக்கு திஷா ரவிக்கு காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய ‘டூல் கிட்’ ஒன்றை பகிர்ந்தார். இதற்காக திஷா ரவி மீது டெல்லி போலீசார் தேச விரோத வழக்கு பதிவு  செய்து கடந்த 13ம் தேதி கைது செய்தனர். அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து கடந்த வெள்ளியன்று மேலும் 3 நாட்கள் அவரது காவல் நீட்டிக்கப்பட்டது. ந்நிலையில்  டெல்லி நீதிமன்றத்தில் திஷா ரவியை போலீசார் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தினார்கள்.  திஷா ரவியை ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Related Stories: