சிவகாசி: சிவகாசியில் மாநில அளவில் நடந்த சேவல் சண்டை போட்டியில் 1500க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசியில் மாநில அளவிலான வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நேற்று நடைபெற்றது. அதிமுக மேற்கு, கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். சென்னை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் இருந்து 1500க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றன. இதற்காக, 100 களங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சேவல் வட்டதுக்கு வெளியே சென்றாலோ அல்லது தலை துவண்டாலோ அல்லது ஓடினாலோ தோற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் 320 சேவல்கள் வெற்றி பெற்றன. 480 சேவல்கள் பங்கேற்ற போட்டி டிராவில் முடிந்தது. வெற்றி பெற்ற சேவல்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரிசு வழங்கினார்.