கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி மற்றும் பேபி நகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களிலும் காட்டுமாடு ஒன்று சுற்றித் திரிகிறது. இங்குள்ள விவசாயிகளின் காப்பி, தேயிலை மற்றும் வாழைத் தோட்டங்களுக்குள் நடமாடும் இந்த காட்டு மாடு பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நடைபாதை மற்றும் சாலையிலும் இந்த காட்டுமாடு நடமாடுவதால் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் பயமின்றி வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.