திருமலை: ஆந்திராவில் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மின்கம்பத்தில் விமானம் மோதியது. இந்த விபத்தில் 64 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு அரபு நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் 64 பயணிகளுடன் நேற்று வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கி கொண்டிருந்தபோது திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையை விட்டு சற்று விலகிச் சென்று, உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.