நாகர்கோவில்: அருமனை பகுதியில் மது விற்ற மஞ்சலாமூடை சேர்ந்த ரவிவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேசமணிநகர் போலீசார் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயசேகர், சின்னவண்ணன்விளை பகுதியை சேர்ந்த முருகன் (44) ஆகியோரை மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி போலீசார் கொட்டாரம் பகுதியை சேர்ந்த தினேஷ் தாவீதையும் (26), ஆசாரிபள்ளம் போலீசார் தலக்குளத்தை சேர்ந்த பவுல்ராஜையும்(62) மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராஜாக்கமங்கலம் போலீசார் அழிக்கால் பகுதியை சேர்ந்த தோபியாஸ் (70), கணபதிபுரத்தை சேர்ந்த நாகப்பன் ஆகியோரை மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈத்தாமொழி போலீசார் கருங்கல் பகுதியை சேர்ந்த குமாரையும் (32), சுசீந்திரம் போலீசார் நல்லூரை சேர்ந்த ராதாகிருஷ்ணனையும் மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.