தேர்தல் தேதியே அறிவிக்கல வீதி வீதியாக வேட்பாளர் பிரசாரம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. அதற்குள் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாம்தமிழர் கட்சியினர், வேட்பாளரையே அறிவித்து வீதி வீதியாக பிரசாரத்தை துவங்கி விட்டனர். சீர்காழி சட்டமன்ற (தனி) தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கவிதா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, விவசாயி சின்னத்தில் வாக்கு கேட்டு சீர்காழி முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. விவசாயி சின்னம் அடங்கிய துண்டு பிரசுரத்துடன் வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் வீடு வீடாக முதற்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் கவிதா ஈடுபட்டார்

Related Stories: