புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு குறித்து கடந்த 10,11ம் தேதிக ளில் தமிழகத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ, ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு, மாநில அரசு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 2 நாட்கள் தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது, ‘தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்,’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, புதுவைக்கு சென்ற இக்குழு அம்மாநிலபேரவை தேர்தல் ஏற்பாடு பற்றியும் ஆய்வு செய்து விட்டு டெல்லி திரும்பியது.