தமிழகத்தில் வரிசைப்படி 234 வது சட்டமன்ற தொகுதி என்பதால் ‘கிள்ளியூர்’ தொகுதியை கடைகோடி தொகுதி என்றும் அழைக்கலாம். கடலோர பகுதியை சார்ந்தும், கரை பகுதிகளுடன் சேர்ந்தும் காணப்படுகின்ற இந்த தொகுதி திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்ற தேர்தல், சென்னை மாகாண சபை தேர்தல் என்று 1952 முதல் காங்கிரஸ் கட்சிக்கே மக்கள் வாய்ப்பை வழங்கி வந்துள்ளனர். முதலில் தமிழ்நாடு காங்கிரசும், பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் இங்கு வெற்றி பெற்றது. பழம்பெரும் தலைவர்களான பொன்னப்பநாடார் மூன்று முறையும், நேசமணி, வில்லியம் தலா ஒரு முறையும் இங்கு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார்கள்.