திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர் ஆகிய இடங்களின் பணி முடியாமல் பாதியிலே நிற்கும் ரயில்வே மேம்பாலங்களை விரைந்து கட்டி முடிக்ககோரியும், புட்லூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் காக்களூர் ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் த.எத்திராஜ், மகேஸ்வரி பாலவிநாயகம், அன்பு ஆல்பர்ட், கே.கே.சொக்கலிங்கம், எஸ்.ஜெயபாலன், ஜி.ஏழுமலை, சே.பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி சேகர் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.