ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர் ஆகிய இடங்களின் பணி முடியாமல் பாதியிலே நிற்கும் ரயில்வே மேம்பாலங்களை விரைந்து கட்டி முடிக்ககோரியும், புட்லூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் காக்களூர் ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் த.எத்திராஜ், மகேஸ்வரி பாலவிநாயகம், அன்பு ஆல்பர்ட், கே.கே.சொக்கலிங்கம், எஸ்.ஜெயபாலன், ஜி.ஏழுமலை, சே.பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி சேகர் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் எஸ்.ஆர்.முனிரத்தினம், மாவட்ட துணை செயலாளர் நடுகுத்தகை கே.ஜெ.ரமேஷ், ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணை பெருந்தலைவர் எம்.பார்க்கத்துல்லாகான், மாவட்ட கவுன்சிலர் இந்திரா பொன்குணசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தொழூவூர் பா.நரேஷ் குமார், ஆர்.ராஜா, பொன்.விமல், கௌரி கஜேந்திரன், எஸ்.என்.குமார், ஆர்.எஸ்.ராஜராஜன், டி.கே.பூவண்ணன், தீலிப்ராஜ், வேதவல்லி சதீஷ், இ.என்.சேகர், டெய்சி ராணி, ரேவதி புகழேந்தி, கஜலட்சுமி, பரமசிவம், பரந்தாமன், தாஸ், பரமேஸ்வரன், தியாகராஜன், ஸ்ரீதர், ஞானம், வெங்கடேசன், சீனிவாசன், தினகரன், அருண் கீதன், சிவப்பிரகாசம், சுமன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: