நலகொண்டா: பொது மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து ‘நாய்’ என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டிய விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் நாகர்ஜூன் சார் பகுதியில் அரசு திட்டப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் அம்மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். விரைவில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, பொதுக்கூட்டமும் நடந்தது. இதில் அவர் பேசிக் கொண்டிருந்த போது, பெண்கள் உள்ளிட்ட சிலர் பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிரான கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர்.