டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை 730 ரூபாயாக உயர்ந்துவிட்டது என்றார். மேலும் பெட்ரோல், டீசல் விலை கூடியதால் விலைவாசி உயர்ந்துள்ளதாக புகார் தெரிவித்தார். நீதிமன்றம் உத்தரவிட்டும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ படிப்புகளுக்கு மத்திய தொகுப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய பாஜக அரசு மறுத்துவிட்டதாக அவர் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், நீதிமன்றம் உத்தரவிட்டும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அகில இந்திய கோட்டாவில் மருத்துவ படிப்புகளில் 50 இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.