காமெங்: அருணாசல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று காலை 4.09 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 2.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் தொடர்புடைய இழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாவில்லை.