சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (38). சங்ககிரி அடுத்த வளையசெட்டிபாளையம் அங்கன்வாடி மைய அமைப்பாளர். இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக முதல்வரின் பெரியம்மாவின் பேத்தியான நான், கடந்த 10 ஆண்டுகளாக, அங்கன்வாடி பணியாளராக இருந்து வருகிறேன். குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர், கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக ஊக்க ஊதியம் வழங்கவில்லை.