சென்னை: சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் ராமு (43), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நான் பூக்கடை மற்றும் யானைக்கவுனி பகுதியில் சாலையோர பழச்சாறு கடை நடத்தி வருகிறேன். பூக்கடை காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்யும் நாகராஜ், சாலையோரம் பழச்சாறு கடை தடையின்றி நடத்த ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ.300 மாமூல் தர வேண்டும் என்று கட்டாப்படுத்தி வாங்கி வருகிறார். அதேபோல், யானைகவுனி போக்குவரத்து காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெயவேலு என்பவரும் ஒவ்வொரு மாதமும் ரூ.500 மாமூல் தர வேண்டும். இல்லை என்றால் போக்குவரத்துக்கு இடையூறாக கடை இருப்பதாக கூறி கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.