சென்னை : சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைவாணர் அரங்கில் கூடியது. 2021ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், பேரவை கூட்டம் தொடங்கியதும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். ஆளுநர் உரை வாசிப்புக்கு முன்பே எதிர்க்கட்சிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஆளுநர் உரையை முடித்த பின்பு அலுவல் குழு உறுப்பினர்களின் கூடி, பிப்ரவரி 5 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவித்தனர்.