பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே பொது கழிவறை சுவரில் விரிசல்

தங்கவயல்: தங்கவயலில் பொது மக்களின் பயன் பாட்டிற்கு திறப்பதற்கு முன்னரே பொது கழிவறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தங்கவயல் ராபர்ட்சன் பேட்டையில் ஜார்ஜ் மன்னர் அரங்கம் உள்ளது. இதன் வளாகத்தில் பூங்கா  அமைக்கப்பட்டு பொது மக்கள் நடைபயிற்சி செய்யவும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பயன் நாட்டிற்காக, இந்த வளாகத்தில் தொகுதி எம்எல்ஏ நிதியில் நகரசபை சார்பில் புதிய பொது கழிவறை கட்டப்பட்டுள்ளது. இதன் சுவரில்  விரிசல் ஏற்பட்டுள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த சுவரை உடனடியாக சீர்ப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: