நாகர்கோவில் :நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் சஞ்சு (29). கோட்டார் செட்டிகுளத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் சாப்ட்வேர் நிறுவனம் தொடங்கினார். இதில் ஏராளமான இளம்பெண்கள் பணிக்கு சேர்ந்தனர். நேற்று முன்தினம் மாலை இந்த நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் கழிவறைக்கு சென்றார். அப்போது உட்புறமாக ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார். இது குறித்து சக பெண் ஊழியர்களுக்கும், கோட்டார் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் சஞ்சு ரகசிய கேமரா மூலம் இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப திட்டமிட்டது தெரியவந்தது.