சென்னைசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலையான சசிகலாவுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தில் சுப்ரமணிய ராஜா என்பவர் வரவேற்பு பேனர் வைத்ததாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினருமான புலியூர் இரா.அண்ணாதுரை சசிகலாவுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் பேனர் வைத்திருந்தார். இதையடுத்து அவரும் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து திருச்சியில் அண்ணாதுரை கூறியதாவது: ஜெயலலிதா இறந்த பின்னர் ஆட்சி கவிழும் என பலர் எண்ணிக்கொண்டிருந்தனர். சூழ்ச்சிகளும் நடந்தது. ஆனால் சசிகலா தியாக உணர்வுடன் எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு ஜெ. சமாதியில் சபதம் செய்துவிட்டு சிறை சென்றார். அதன்பின்னர் அவரையே ஓபிஎஸ், இபிஎஸ் கட்சியைவிட்டு நீக்கிவிட்டனர். அதிமுக - அமுமுக என 2 ஆக உடைந்ததால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 38 இடங்களிலும்