சென்னை: கிழக்கு திசை காற்றலைகளால் 5 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிழக்கு திசை காற்றலைகளால் 5 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.