வடகிழக்கு டெல்லி கலவரம் 5 வழக்குகளில் தொடர்புள்ள வாலிபருக்கு ஜாமீன்

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் 5 வழக்குகளில் தொடர்புடைய வாலிபருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் கோகுல்புரி பகுதியில் நடந்த கலவரத்தில் 24 வயது வாலிபர் ஆசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 வழக்குகள் பதியப்பட்டன. இது தொடர்பாக 2 போலீஸ் சாட்சிகள் சேர்க்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினோத் யாதவ் முன்னிலையில் நடந்தது. அப்போது ஆசாத் மீது போலீசாரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போதுமான சாட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து ஆசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: