கையெறி குண்டு வீச்சு: 4 வீரர்கள் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஷாபிஸ்போரா பகுதியில் ராணுவத்தின் சார்பில் சுகாதார பணி ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதில், ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில், 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: