குடியரசு தினம் மெட்ரோ ரயில் இயக்குவதில் இன்று கட்டுப்பாடு

புதுடெல்லி; குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மெட்ரோ ரயில் இயக்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதை பகுதியில் உள்ள மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன், பட்டேல் சவுக், லோக் கல்யாண்மார்க் பகுதி மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை வேளைகளில் மூடப்படும். மேலும் இன்று பிற்பகல் 2 மணி வரை அனைத்து மெட்ரோ ரயில்நிலையங்களிலும் உள்ள வாகன நிறுத்தம் மூடப்படும். மத்திய தலைமை செயலக பகுதி மெட்ரோ ரயில் நிலையம் பயணிகள் யெல்லோ லைனில் இருந்து வயலெட் லைனுக்கு மாறிச்செல்ல மட்டும் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு டெல்லி மெட்ரோ அறிவித்து உள்ளது.

Related Stories: