பாட்னா: பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து தாம் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்று நிதிஷ்குமார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பீகார் முன்னாள் முதலமைச்சரும், சம்யுக்த சோசலிசுட் கட்சியின் தலைவருமான கர்ப்பூரி தாக்கூரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நிதிஷ்குமார், கர்ப்பூரி தாக்கூர் கடந்த 70வது -எப்படி பதவி நீக்கப்பட்டாரோ அதுபோல தாமும் பதவிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறியுள்ளார். கர்ப்பூரி தாக்கூர், அனைத்து தரப்பு மக்களுக்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டிய அவர், தாமும் அனைத்து தரப்பு மக்களுக்காக உழைப்பதால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவித்திருக்கிறார்.