மும்பை: இந்திய அணியின் முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிஷன் சிங் பேடி கூறியிருப்பதாவது: ஆஸி. தொடரின் போது ரகானேவை நான் கூர்ந்து கவனித்தேன். எந்தவொரு கேப்டனுக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால், பந்துவீச்சாளர்களை கையாளும் திறன் தான், அதில் தான் ரகானே சிறப்பாக செயல்பட்டுள்ளார். கேப்டனின் பந்துவீச்சு மாற்றங்கள் மற்றும் பீல்டிங் அமைப்புகளை மதிப்பிடுவதற்கு 3 டெஸ்ட்கள் போதுமான நேரம்.