மதுரை: மினி கிளினிக்கிற்கு அவுட் ேசார்சிங் முறையில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்த ஐகோர்ட் கிளை, மாவட்ட சுகாதாரக்குழு மூலம் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மதுரை, வளர்நகரை சேர்ந்த வக்கீல் வைரம் சந்தோஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மினி கிளினிக்குகளுக்கு தனியார் அவுட் சோர்சிங் முறையில் பணி நியமனம் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தற்ேபாதைய நிலை நீடிக்க ஏற்கனவே ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன் ஆஜராகி, ‘‘கொரோனா கால அவசரம் கருதி தற்காலிகமாக ஓராண்டுக்கு மட்டும் மினி கிளினிக்குகள் துவக்கப்பட்டுள்ளன. தற்காலிக நியமனம் தான் இது. பணி நீட்டிக்கவோ, நிரந்தரம் செய்யவோ வாய்ப்பில்லை’’ என்றார்.